தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே சேதமான பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு
மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி
ஈரோடு பகுதியில் இன்று மின்தடை
திரில்லர் கதையில் கயல் ஆனந்தி
ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்
பெண்ணை தாக்கிய 4 பேருக்கு வலை
கீழச்சிவல்பட்டியில் தமிழர் திருநாள் நிறைவு விழா
தொழிலதிபர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு
திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..!!
தஞ்சாவூரில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது
பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
பைனலில் ராம்குமார் – மைனேனி டென்னிசில் பதக்க வாய்ப்பு உறுதி
வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
பொன்னேரி அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
மேயர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
1,623 மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் 3 பேர் கைது
துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி மண்டபம்: ராமநாதபுரம் பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட 3 நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘‘ஆரம்பக் கல்வி என்பது குழந்தைகளின் மனதில் எளிதாக பதியக்கூடிய ஒன்றாகும். இதையறிந்து துவக்க பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி, ஆற்றலுடன் கூடிய கருத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாடல், நடனம், நாட்டுப்புற இசை, குழு நாடகம் மூலம் கல்வியை கற்பிக்கும் திட்டமான எண்ணும் எழுத்தும் துவக்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வி வழங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி மூலம் மாணவ,மாணவியர் எளிதாக கருத்துகளை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இப்பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2023-24ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு கல்வியை நேரடியாக கொண்டு செல்வதை விட பாடல், நடனம், குழு நாடகம் மூலம் எடுத்துச் செல்லும் போது அக்குழந்தைகளுக்கு பொது அறிவு, உடற்பயிற்சி ஆற்றலுடன் கூடிய கருத்து ஆழமாக பதிகின்றன. இதனால் அக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வி ஒரு ஆழமான கல்வியாக இருக்க முடியும். ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைக்கவேண்டும் என்றார்.ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் புனிதம், உதவி பேராசிரியர்கள் டேவிட் அந்தோணி, பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் கர்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ரமேஷ் கண்ணன், ராமநாதன், முகமது தஸ்தகீர், கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம் ஊராட்சியில் அரசு பள்ளி துவங்க வேண்டும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ மாங்குடி கோரிக்கை
2 கடைகளில் கொள்ளை